ஃபேஸ்புக்கில் நண்பர் தாஜ்-ன் ஸ்டேட்டஸ்…
***
24 – இஸ்லாமியக் கூட்டமைப்பினர்கள்
கவனம் கொள்வீராக!
சிரியாவில்
அதிபர் ஆசாத்துக்கு எதிராக
2011-வில் இருந்து இன்றுவரை
புரட்சிப் படையெனும்
இஸ்லாமிய மக்களுக்கும்……
அதிபரின் ராணுவம் என்னும்
இஸ்லாமியப் படைகளுக்கு இடையே….
தொடர்ந்து
சண்டை நடந்து வருகிறது.
//இதுவரை…
சுமார் 80 ஆயிரத்திற்கு மேலானோர்
இறந்திருக்கிறார்கள்.
அத்தனை பேர்களும் முஸ்லிம்கள்தான்! //
நேற்றைய செய்தித்தாளில்….
ஓரு இஸ்லாமிய ராணுவ வீரனைக் கொன்று
அவனது ஹிருதயத்தை
இஸ்லாமியப் புரட்சிப் படையில் ஒருவன்
கையில் எடுத்து சுவைக்கும் செய்தி
நெட்டில்….
‘யூ – டியூப்’ல் காண கிடைப்பதாக
தகவல் வெளிவந்திருக்கிறது!
இஸ்லாமிய நாட்டில்…
இஸ்லாமியர்களுக்குள்
எந்தவோர் சமாதானமும் அற்று
வருடக்கணக்காக
இப்படி…..
இஸ்லாமியர்கள்
இஸ்லாமியர்களை கொன்றுகுவித்தபடி
வெற்றி வெற்றி யெனத் திரிகிறார்கள்!
அதாவது…
இன்னொரு ஆப்கானிஸ்தானாக
இன்றைக்கு மாறிக்கிடக்கிறது சிரியா!
இந்த நிகழ்வை…
விஸ்வரூபம் எடுத்த
கமலஹாசன் மாதிரி இன்னொருவர்
சினிமாவாக எடுக்கக் கூடுமெனில்…
தமிழக இஸ்லாமியக் கட்சிகளான
24-கூட்டமைப்பினர்களும் பொங்கி எழுவார்கள்.
தங்களது அமைப்பினர்களை எழுப்பிவிட்டு விடுவார்கள்!
தமிழக சந்து பொந்துகளில் கூட
‘எதிர்ப்பு’ போஸ்டர் ஒட்டப்படும்!
மௌண்ட் ரோட்டை அடைத்துக் கொண்டு
‘ஹதம்’ செய்வார்கள்.
ஆனால்…
இன்றைக்கு அந்தப் போர் நிறுத்தத்திற்கு
ஒரு சிறு காயையும் நகர்த்த மாட்டார்கள்!
தமிழகத்தில் வாழும்
இந்த 24-இஸ்லாமியக் கூட்டமைப்பினரையும்…
இவர்களிடமிருந்து மக்களையும்…
இறைவன்தான் காபந்து செய்ய வேண்டும்.
***
நன்றி : தாஜ்
***
சாதிக்கின் கமெண்ட் :
மறுமொழியொன்றை இடுங்கள்